ரூபாய் நோட்டுமீதான மத்திய அரசின் நடவடிக்கையால், முலாயம் சிங்கும், மாயாவதியும் தூக்கமிழந்து தவிக் கின்றனர் என உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. இதை யொட்டி, கன்னாஜில் பாஜக தலைவர் அமித்ஷா, பிரசார பேரணியை நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், ரூ. 500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கள்ளச்சந்தை வியாபாரிகள் பதுக்கிவைத்திருந்த பல லட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகள் தற்போது வீணாகிவிட்டன.
இதனால் ஒருவகையில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் ஆகியோரின் முகம் பொலிவிழந்துவிட்டது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இருவரும் நிம்மதி இழந்துள்ளனர்.
இந்தத்தொகுதியின் எம்.பி.யும், முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள்யாதவ், மக்களோடு மக்களாக ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து மக்களின் அனுதாபத்தைப் பெறமுயலுகிறார். மக்களாகிய நீங்கள் ஏடிஎம் மையங்களில் மணிக் கணக்கில் காத்திருப்பதன் கஷ்டம் எனக்குத் தெரியும். ஆனால் நாட்டு நன்மைக்காக இதை நாம் செய்து தான் ஆக வேண்டும்.
உங்களுக்கு என்ன வேண்டும்? நாட்டு நலனா? – கருப்புப் பணமா? என்றார் அவர்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.