மம்தாவின் இன்னொரு முகம்

மம்தா பேனர்ஜி இந்த கருப்பு பண ஒழிப்பை மிக தீவிரமாக எதிர்ப்பதன் உண்மையான நோக்கம் என்ன?

மம்தா பேனர்ஜி'யின் மிக பெரிய வாக்கு வங்கி மேற்கு வங்காளத்தில் உள்ள சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேசிகள் தான்.

இதைத் தவிர பூட்டான், நேபாள் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தயார் செய்து கொடுத்தவர்கள் வேறு யாரும் கிடையாது. சாட்சாத் இந்த திரிணாமூல் காங்கிரஸ் அடியாட்கள் தான்.

இந்த சட்டவிரோத குடியேறிகளால் வங்கி கணக்கை திறக்க முடியவில்லை. காரணம் RBI கேட்ட அடையாள அட்டைகளை இவர்களால் தயாரிக்க முடியவில்லை. இவர்கள் இந்த நாட்டுக்குள் இருப்பதே சட்டவிரோதம், இதில் எங்கிருந்து இவர்களால் வங்கி கணக்கை திறக்க முடியும்?

இந்த கருப்பு பணம் வேட்டையில், 500 மற்றும் 1000 ருபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமானவர்கள்.

1 கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள்.
2 வரி ஏய்ப்பு செய்தவர்கள்.
3 சட்டவிரோதமாக குடியேறிவர்கள்.

இதில் மூன்றாவது உள்ளவர்கள் தான் மம்தா பேனர்ஜி'யின் கண்ணின் மணிகள், காரணம் அவர்களின் வோட்டு. அவர்களை காப்பாற்ற தான் அம்மணி கூரை ஏறி கூப்பாடு போடுது. இது முழுக்க முழுக்க மம்தா பேனர்ஜி'யின் தனி மனித ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கருப்பு பணம் வைத்து இருப்போரை காப்பாற்றவும் செய்யப்படும் கேவலமான முயற்சியே ஆகும்.

மம்தா பேனர்ஜி டில்லி வரை வந்தது போராட்டம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. கல்கத்தாவிலேயே போராட்டம் செய்து இருக்கலாம். டில்லியில் மீடியா கவரேஜ் வேண்டும், அதன் மூலம் மத்திய அரசை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்று ஒரு கேவலமான திட்டம் தான் இது.

மம்தா பேனர்ஜி'யின் கேடுகெட்ட திட்டத்தின் பின் உள்ள கேவலமான எண்ணத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு இந்தியனும் மிக தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் இந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்கள் இந்த பண வாபஸ் அறிவிப்பினால் 100'க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக பொய் பரப்புவது மட்டும் அல்லாமல், படிக்காத பாமர மக்களிடம் சென்று, தாங்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும், அப்படி எடுத்தால் கையில் மை வைப்பாரகள் என்றும் புரளிகளை கிளப்பி அப்பாவிகளை அலைக் கழிக்கிறார்கள்.

இவை அனைத்தும் வடிக்கட்டிய பொய். வங்கி கணக்கு இல்லாமல், பழைய பணத்தை மாற்றுவோர்க்கு மட்டும் தான் மை வைக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இங்கும் மம்தா பேனர்ஜி ஒப்பாரி வைப்பது இதற்கு தான். சாரதா சிட்பண்ட் மோசடியில் கிடைத்த அத்துணை கருப்பு பணத்தையும் இந்த சட்டவிரோதமாக குடியேறியர்வர்களிடம் அளித்து வங்கியில் மாற்றி விட முயற்சி செய்து அதில் பாதி வெற்றியும் பெற்று விட்டார். மத்திய அரசு எப்பொழுது அதற்கும் தடை போட்டதோ, ஓலம் ஒப்பாரி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

சட்டத்தை மதித்து, இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு அளித்து, நேர்மையாக வரி செலுத்தி, நாட்டுப் பற்றுடன் வாழும் எந்த இந்தியனும் இது போல கேடுகெட்ட அரசியல் வாதிகளின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டான்.

இப்படி எந்த மிரட்டலுக்கு பயப்படாமல் பிரதமர் வெகு நேர்த்தியாக தன் குறிகோளான கருப்பு பண ஒழிப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

இதை பொறுக்க முடியாமல், வருகிற 28ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது இருக்கிறது ஊழல் பெருச்சாளிகள் கூட்டமும், அதற்கு ஒத்து ஊதும் ஒரு சில ஊழல் வியாபார கூட்டமும். கவலை படாதீர்கள். இந்த போராட்டமும் நீர்த்து போக செய்வோம்.

இதை நீங்கள் படிப்பதுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இதை அனைவரும் அறிந்து கொள்வது நாட்டுக்கு நலம்.

ஜெய்ஹிந்த்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...