தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்

ஜல்லிக்கட்டு என்ன என்பதும், அதில் காளைகள் துன்புறுத்தப் படுவதில்லை என்பதும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும். என பாஜக எம்பி இல.கணேசன் பேசினார்.

மாமதுரை மக்கள் பேரவை சார்பில் அவருக்கு தொழில்வர்த்தக சங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநிலச் செயலர் ரா.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எஸ்.சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் வரவேற்றார். இதில் இல.கணேசன் பேசியதாவது:

மத்தியஅரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நியாயமான முறையில் சம்பாதித்தவர்கள் பயப்படத் தேவையில்லை. இந்தவிவகாரத்தில் பலகருத்துகளை பரப்புகின்றனர். இத்திட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள்தான் எதிர்த்து குரல் எழுப்புகின்றனர். நேர்மையாக சம்பாதித்த பணத்துக்கு நஷ்டம்வராது. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார். உண்மையில் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்கப் பட்டது காங்கிரஸ் ஆட்சியில். அந்த ஆட்சிக்கு துணைநின்றது திமுக.

ஜல்லிக்கட்டு என்ன என்பதும், அதில் காளைகள் துன்புறுத்தப் படுவதில்லை என்பதும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும். அதனால்தான் காளைகளை காட்சிப் படுத்தப்படும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தர விட்டது. ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்தவழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இறைச்சிக்காக மாட்டை வெட்டுவதற்கு தடை விதிக்க வில்லை. ஆனால், உயிருடன் உள்ள மாட்டுடன் விளையாட மட்டும் தடைவிதிப்பதா? என சுப்பிர மணியன்சுவாமி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்லதீர்ப்பு வரும் என நம்பிக்கையுள்ளது. சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் தான் மத்திய அரசுக்கு வேலைவரும். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்ல தீர்ப்பு வரட்டும் என மீனாட்சியம்மனை பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...