ஜல்லிக்கட்டு நடத்திய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்றுநடைபெற்ற தியாக ராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்ற பாஜக எம்.பி  இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:

திருவையாறில் பாட்டுக்காக எடுக்கும்விழா வெற்றிகரமாக நடந்ததில் எனக்குமகிழ்ச்சி. ஆனால், தமிழகத்தில் மாட்டுக்காக எடுக்கும்விழா நடைபெறாமல் போனதில் எனக்கு அதிர்ச்சி. ஆனாலும், தடையைப்பற்றி கவலைப்படாமல் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்பதற்கு அடையாளமாக ஜல்லிக்கட்டு நடத்திய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். அவர்கள் தேசியவிரோதிகள் அல்லர், தீவிரவாதிகள் அல்லர். மாட்டுக்கு ஆதரவாளர்கள். அவர்கள்மீது தடியடி நடத்தியது தேவையில்லாதது. விழாக்காலம் முடிவடைந்து விட்டது. எனவே, அவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவுசெய்யாமல், உற்சாகத்துக்கு பாராட்டு தெரிவித்து, அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்.

போராடிய இளைஞர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவாக தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு நல்லதாக இருக்கவேண்டும். வாய்ப்பு இருந்தால் மத்திய அரசு தலையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுசெய்யும்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் இரண்டுகொள்கைகள் அடிப்படையில்தான் தொடங்கப்பட்டன. ஒன்று பிரிவினைவாதம், இன்னொன்று நாத்திகம். ஆனால், தேசியசிந்தனையோடு வாழ்ந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப அரசியல், உத்தரப்பிரேதசமாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் அதுமக்களால் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது. புதியபார்வை ஆசிரியர் ம.நடராஜன் கூறியதைப்போல, தமிழக அரசைக்கவிழ்க்க பாஜக சதி செய்யவில்லை. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடனும் நல்லுறவையே கடைபிடித்துவருகிறது. தமிழ்நாட்டின் மீது கூடுதல்கவனம் செலுத்தி, நல்லுறவுடன் செயல்பட்டுவருகிறது. நடராஜன் என்ன பொருளில் அவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...