கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்துகணிப்பு வெளியிடப்பட்டது.
கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-
மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்த மானவர் என்று 65 சதவீதம்பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவிவகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.
பணமதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பலனைவிட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.
ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியைவழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.