40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண்

பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண் அடைந்திரு ப்பதாகவும், தீவிரவாதிகளின் செயல் பாடுகள் குறைந்துள்ளதாகவும் மாநிலங்களைவையில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது, ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குபின்னர், நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
பணநீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் நாடுமுழுவதும் 700க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந் துள்ளனர்.

பணம் எடுக்க விதிக்கப் பட்ட கட்டுப்பாடு காரணமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்தை தூண்டுவோர் பணம் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதனால் அங்கு வன்முறை குறைந்தது. பொருளாரத்தை சீர்குலைக்கும் கள்ளநோட்டுகள் ஒழிக்கப் பட்டுள்ளன. கருப்பு பணம் வைத்திருந்தோர், தீவிரவாத அமைப்புகள், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்கள், போதை பொருட்கள்விற்போர், ஹவாலா பேர்வழிகள் ஆகியோரின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பலஇடங்களில் முடக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்துள்ளது. இதன்மூலம், வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...