நீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது

நீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரின் கங்கை ஆற்றங் கரையில் பரமார்த்த நிகேதனில் சர்வதேச யோகாதிருவிழா ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழாவில் பேசிய தாவது: யோகா என்பது ஒரு உடற் பயிற்சி மட்டும் அல்ல. அது மனம், ஆன்மீகம், மற்றும் உடல்ரீதியில் அமைதியை தேடும் ஒரு வழி. யோகா மனிதர்களை இயற்கையுடன் நெருங்க வைக்கிறது. இது மனிதனின் உடல் மற்றும் மனத்தை ஒழுக்க த்துடன் வைக்கிறது. யோகாவை நான் தொடர்ந்து செய்கிறேன். இது எனக்கு உயர்ந்த உணர்வை தருகிறது. இது என்னையும் உங்களையும் இணைக்கும் கருவியாக செயல்படுகிறது.

உலகநாடுகளுக்கு தீவிரவாதமும் பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள நிலையில் யோகாதான் நீடித்த அமைதிக்கு வழிகாட்டுகிறது. யோகா என்பது நம்மை ஒருவராக காட்டும்முயற்சி. அது என்னுடையது என்பதில் இருந்து நம்முடையது என்ற நிலைக்கு மாற்றுகிறது. அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் மனித ஆன்மாவை அளவிடுவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஜெர்மனியைசேர்ந்த அறிஞர் மேக்ஸ் முல்லர் இந்தியா மிகவளர்ச்சி அடைந்த மனதை கொண்டவர்களை உடையநாடு என்றும் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வழிமுறை அங்கு இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே எவ்வாறு ஒழுக்கமாகவாழ்வது என்பதை உலக நாடுகளுக்கு யோகா பறைசாற்றுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...