உத்தரபிரதேச பாஜக முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வு செய்யப்பட்டார் .சட்ட சபை தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோகவெற்றி பெற்று ஆட்சிகட்டிலில் அமரவுள்ளது. இங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பா.ஜ., முழுக்கவனம் செலுத்தி வருகிறது . இது தொடர்பாக டில்லி பா.ஜ., மூத்த நிர்வாகிகள், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசித்தனர்.
அம்மாநில பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவிகிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யா நாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவுசெய்துள்ளது. மவுரியா, மற்றும் தினேஷ் சர்மா ஆகிய இருவருக்கும் துணைமுதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.
யோகி ஆதித்யாநாத் உ .பி., மாநிலம் கோரக்பூர் பகுதியில் இருந்து லோக் சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். கோர்கா நாத் மடத்தின் சாமியாராக இருந்துவரும் இவர் சிறந்த பார்லிமென்டேரியன் என பெயர்பெற்றவர். இவரது பேச்சு அனல்பறக்கும் விதமாக இருக்கும்.
உ.பி., முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத், மார்ச்-19ல் பதவி ஏற்கிறார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.