பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஒரு நாள் முன்னதாகவே அந்த கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, புவனேஸ்வர் வந்து விட்டார். அங்கு 14-ம் தேதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கட்சி நிர்வாகிகளைச் சத்தித்தார். இன்று தொடங்கும் இரண்டுநாள் கூட்டத்தை அமித்ஷா தொடங்கிவைக்கிறார். 16-ம் தேதி, பிரதமர் மோடி முடித்துவைத்துப் பேசுகிறார்.
தேசிய செயற் குழுக் கூட்டம் குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''கடந்த ஆண்டு கேரளாவில் தேசியகவுன்சில் கூட்டத்தைக் கூட்டினோம். 2016 சட்டமன்ற தேர்தலில் அங்கு முதல் கணக்கை பிஜேபி தொடங்கியது. அதன்பிறகு, உத்தரப் பிரதேசம் அலகபாத்தில் கடந்த ஜூன் மாதம் தேசிய செயற் குழுவைக் கூட்டினோம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியை அமைத்து இருக்கிறோம். மேற்குவங்களாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி காலூன்றவேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாநிலங்களில் பி.ஜே.பி பலமாக காலூன்றி, பெரியளவில் வெற்றியை தேடித்தரும். கட்சி வளர்ச்சி, நாட்டின்வளர்ச்சி குறித்து தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்படும்'' என்றார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.