உ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ரத்து

உ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ்பாதுகாப்பை நீக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேநேரத்தில், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங், மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பில், எந்தமாற்றமும் செய்யப்படவில்லை.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்தஉடன், கடந்த ஒருமாதமாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, யோகி ஆதித்யநாத் எடுத்துவருகிறார்.

'வி.ஐ.பி., என்ற கவுரவத்தை காட்டுவதற்காக, சிலர் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதுபோன்ற அரசியல்வாதி உள்ளிட்ட, முக்கியநபர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்படும்

அல்லது நீக்கப்படும்' என, முதல்வர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசியல்வாதி களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து, நேற்று முன்தினம் ஆராயப் பட்டது.

உ.பி.,யில் தற்போது, 151 வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில், 105 பேருக்கான பாதுகாப்பு, முற்றிலுமாக ரத்துசெய்யப்படுவதாகவும், சிலருக்கு பாதுகாப்பு குறைக்கப்படுவதாக வும், உ.பி., அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர்களான, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங், அந்தகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுவரும், 'இசட்பிளஸ்' பாதுகாப்பில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும்வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தமுடிவு, உடனடியாக அமலுக்கு வருவதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது.

சமாஜ் வாதியின் சிவ்பால்யாதவ், அசம்கான், டிம்பிள் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளது. பா.ஜ., பொதுச்செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சதீஷ் சந்திரமிஸ்ரா, சமாஜ் வாதியின் அஷு மாலிக் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

இதனிடையில், உ.பி.,யில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியரின்வருகையை பதிவுசெய்யும், 'பயோ மெட்ரிக்' எனப்படும், கைவிரல் பதிவுசெய்யும் திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த, உ.பி., அரசு உத்தரவிட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...