வங்கதேச எல்லைவழியாக ரோஹிங்கயா அகதிகள் வருவது, கள்ள ரூபாய்நோட்டுகள் கடத்தப்படுவது போன்ற பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள அந்த எல்லைப்பகுதி மாநிலங்களின் முதல் வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, மிúஸாரம் ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்கவிருக்கும் ஒரு நாள் ஆலோசனைக் கூட்டம், மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வரும் வியாழக் கிழமை (டிச. 7) நடைபெற விருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களும் வங்கதேச எல்லையை யொட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச எல்லைப்பகுதி மாநில முதல்வர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே, பாகிஸ்தான், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ராஜ்நாத்சிங் தனித் தனியாக ஆலோசனைகளை நடத்தியுள்ளார். வியாழக் கிழமை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில், மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், வங்கதேச எல்லை வழியாக கள்ள ரூபாய் நோட்டுகள், போதை மருந்துகள் ஆகியவை இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவது குறித்தும் ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த வாரம் மட்டும் 87 ரோஹிங்கயா அகதிகள் பிடிபட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் கே.கே. சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.