ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட 139 பேருக்கு நட்சத்திரபேச்சாளர் அனுமதி

ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் உட்பட 139 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது.

பொதுத்தேர்தல் அல்லது இடைத் தேர்தல் நடக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை நட்சத்திர பேச்சா ளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். அவ்வாறு அங்கீகரித்து அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கான பயணச்செலவு, வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேராது.

தற்போது ஆர்கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் பாஜக, அதிமுக, திமுக, நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த 139 பேருக்கு தேர்தல் ஆணையம் நட்சத்திரபேச்சாளர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாஜக சார்பில், தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.,வில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேருக்கும் திமுக.,வில் கட்சியின் செயல்தலைவர் முக.ஸ்டாலின், துரை முருகன், கனி மொழி உட்பட 27 பேருக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 19 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...