தமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்

தமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒகி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கானோர் குஜாராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி‌ புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், குஜராத், மஹாராஷ்ட்ரா, லட்சத்தீவில் தஞ்மடைந்துள்ள மீனவர்களை தமிழகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அத்துடன் மீனவர்களை மீட்பது தொடர்பாக குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில அரசுகளுடன் தாம் பேசியுள்ள தாகவும் அவர் கூறினார். கன்னியாகுமரி வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடனும் இதுகுறித்து தாம் ஆலோசித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒகி புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு கேரள அரசு ‌வழங்கியதற்கு ஒப்பானஇழப்பீட்டை தமிழக அரசும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...