பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மக்களுக்கு விரைவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.


மத்திய தகவல் ஆணையத்தின் 12-ஆவது மாநாடு, தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் அவர் மேலும்பேசியதாவது:


உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ்பெறப்பட்டதன் நோக்கம் என்ன? ஒட்டுமொத்த பணத்தையும் செல்லாது என்று அறிவிப்பதால் எப்படி பலன்கிடைக்கும் என்று மக்கள் கேட்கிறார்கள்.


முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்; படுக்கை அறை, கழிப்பறை போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் உள்பட ஒட்டு மொத்த பணமும் வங்கி சுழற்சிக்கு வரவேண்டும் போன்ற காரணங்களுக்காக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


வங்கிகளுக்கு வந்தபணத்தில் கருப்பு பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.


எனவே, ரிசர்வ் வங்கி தனது மதிப்பீட்டுப் பணிகளை விரைவில் முடித்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்களை நாட்டுமக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும். மேலும், வங்கி சுழற்சிக்கு வந்த மொத்தபணம் எவ்வளவு? அதில், கருப்புப் பணம் எவ்வளவு? வரி வரம்புக்குள் வந்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களையும் மக்களுக்கு ரிசர்வ்வங்கி தெரிவிக்க வேண்டும்.


ஏனெனில், உயர் மதிப்புடைய ரூபாய்நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, 50 நாள்கள் அவதிப்பட்டவர்கள் மக்கள். அவர்களுக்கு விளக்கம்கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.


6 மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல்நடப்பதால், எப்போதும் தேர்தல் விழாக்கோலத்துடன் இந்தியா உள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கும், ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
தகவல் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்களுக்கு ஆணையர்கள் விரைவாக பதிலளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு அளிக்கப்படும் தகவல்கள், உண்மையாகவும், சரியாகவும் இருக்கவேண்டும். மேலும், 95 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், மனுதாரர்களுக்கு அவர்களது தாய்மொழியிலேயே பதிலளிக்கவேண்டும். இதேபோல், தகவல் கோரும் மனுக்களையும் படிப்படியாக தாய்மொழிக்கு மாற்றவேண்டும். இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள், மனுதாரருக்குத் தெரிந்தமொழியில் இருக்க வேண்டும். இவை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசியிருக்கிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...