விவசாயகடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்செய்ய இருக்கிறார். இந்த பட்ெஜட்டில் வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயகடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்க அருண்ஜெட்லி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு  நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடி விவசாயகடன் வழங்க இலக்கு வைக்கப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் வரை ரூ. 6.25 லட்சம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. வழக்கமாக விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் கடன்வழங்கப்படும். கூடுதல் சலுகையாக ரூ. 3 லட்சம் வரையிலான குறுகியகால கடன்களுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தி விட்டால் மேலும் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு மிகக் குறைந்த அளவாக 4 சதவீத வட்டிமட்டுமே வாங்கப்படுகிறது.

பொதுத் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வட்டார கிராமவங்கிகள் ஆகியவை அதிக அளவில் விவசாய கடன்களை அளிக்கின்றன. அவற்றில் கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் நபார்டுவங்கி உதவியுடன் விவசாய கடன்களை அளிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அனைத்து விவசாய கடன் வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...