இந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை

இந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


நாட்டின் 69-ஆவது குடியரசு தினம் மற்றும் ஆசியான்-இந்தியா நல்லுறவு ஏற்பட்டு 25-ஆண்டுகளா வதையொட்டி நடைபெறும் மாநாடு ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் மோடி ஒருகட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரை 10 ஆசியான் நாடுகளின் 27 பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளது. அதில் மோடி கூறியிருப்பதாவது:


தாய்லாந்து, வியத்நாம், இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புருணே ஆகிய ஆசியான் நாடுகளு டனான இந்தியாவின் உறவில் எவ்வித போட்டியோ, பொறாமையோ இல்லை. எதிர் காலம் குறித்து நமக்குள் தெளிவான இலக்கு உள்ளது. நாடுகளின் வலிமை, பரப்பளவு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, வர்த்தகம், தொழில் உள்பட அனைத்து நிலைகளிலும் நாம் ஒருவரை மற்றொருவர்மதித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.


இந்தியா-ஆசியான் நாடுகளிடையிலான சிறப்பான நல்லுறவு கால் நூற்றாண்டை எட்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் 4-இல் ஒருபங்கை நாம் கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் மத்தியிலும் நாம் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளோம். கலை, இலக்கியம், மொழி, கலாசாரம் உள்ளிட்டவற்றை நமக்கிடையே பகிர்ந்துவருகிறோம். இந்தியா-ஆசியான் அமைப்பு உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் மட்டும் ஆகியிருக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளுடான இந்தியாவின் தொடர்பு பலநூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்தது. பண்டைய வரலாறு முழுவதும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்திய கட்டடக்கலை உள்ளிட்டவற்றின் தாக்கம் தெற்காசிய நாடுகளில் முழுமையாகப் பரவியுள்ளது.


இன்றைய நவீன உலகில் நமக்கிடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. ஆசியான் நாடுகளுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீடுகளில் 20 சதவீதம் ஆசியான் நாடுகளில் உள்ளது. நமக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.

இந்தியாவின் 16 நகரங்களில் இருந்து ஒருவாரத்தில் சிங்கப்பூருக்கு மட்டும் 240 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான் இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் கடந்து செல்ல வேண்டிய பாதைகளும், அடையவேண்டிய இலக்குகளும் அதிகம் உள்ளன. ஆசியான் நாடுகளை இந்தியாவின் நட்பு நாடுகள் என்று மட்டும் கூறி நிறுத்திவிட முடியாது. உருவாகிவரும் புதிய இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவும் ஆசியான் நாடுகள் விளங்கி வருகின்றன என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...