தொழில் அதிபர்கள் வாங்கிய கடனில், ஒருபைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை

தொழிலதிபர்களால் வாங்கப்பட்ட கடன்களை பிரதமர் நரேந்திரமோடி தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிரூபிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.


 கர்நாடக மாநிலம், ஹும்னாபாதில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கரும்பு விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது, இதுகுறித்து அமித் ஷா கூறியதாவது:


 ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தொழில திபர்கள் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாயை பாஜக தள்ளுபடி செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்பத்திரும்ப குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார். ஆனால், மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்ததும், தொழிலதிபர்கள் வாங்கிய கடனில் ஒருபைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.


 தொழிலதிபர்கள் பெற்ற கடன்கள் எங்கேனும் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆதாரம், ராகுலிடம் இருக்கும் பட்சத்தில், அதை அவர் வெளியிட வேண்டும். அப்படி அதை அவர் வெளியிட்டால், நான் அதுகுறித்து பதிலளிக்க தயாராக உள்ளேன். அதற்காக கர்நாடக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பேன். இதேபோல், தொழிலதிபர்களுக்கு வரியும் ரத்துசெய்யப்படவில்லை. சிறிய அளவில் மட்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருமானவரி எதுவும் விதிக்கப்பட வில்லை. எதிர்காலத்திலும் விவசாயிகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் நலன்கள் மீது மத்திய அரசு முழு அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது.

கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சியமைத்ததும், விவசாயிகள் நலத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்.
 கர்நாடகத்தில் எங்கள் கட்சிக்கு ஆட்சிக்குவந்தால், 90 நாள்களுக்குள் கரும்பு ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சேர்ப்போம்.
 மத்தியில் ஆளும் பாஜக அரசால், விவசாயிகள் நலன்தொடர்பாக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, அத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய அனுமதிக்க வில்லை. இதை அனுமதித்தால், கர்நாடகத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்று காங்கிரஸ் அரசு அச்சப்படுகிறது.


 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதன்பிறகு அதன்பிறகு பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்ளில் பாஜக வென்றதற்கு, விவசாயிகள் மத்தியில் கட்சிக்குஇருக்கும் ஆதரவே காரணமாகும் என்றார் அமித் ஷா.


 முன்னதாக, பிதரில் இருக்கும் புகழ்பெற்ற சீக்கிய குருத்வாராவுக்கு அமித்ஷா சென்று வழிபட்டார். இதேபோல், பிதரில் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கும் அமித் ஷா ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.