இந்திய அரசியலில் பாகிஸ் தானை ஈடுபடுத்துவது ஏன்?

இந்திய அரசியலில் பாகிஸ் தானை ஈடுபடுத்துவது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக. தேசியத்தலைவர் அமித் ஷா கேள்வி யெழுப்பியுள்ளார்.

இது குறித்த சுட்டுரையில் அமித் ஷா பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில்,திப்பு சுல்தானின் நினைவுதினத்தையொட்டி பாகிஸ்தான் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டிருப்பது. முகமது அலி ஜின்னாவை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் புகழ்ந்துபேசியிருப்பது தொடர்பான செய்திகள் குறித்த காட்சிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் சிறப்பான நுண்ணுர்வு இருக்கிறது.

திப்புசுல்தானின் பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சி முன்பு விழாவாக கொண்டாடியது. அதேபோல், பாகிஸ்தான் அரசு  திப்பு சுல்தானின் நினைவுதினத்தை அனுசரித்தது. மணிசங்கர் அய்யர், ஜின்னாவை புகழ்ந்துபேசுகிறார்.
குஜராத் தேர்தலானாலும் சரி, கர்நாடகத் தேர்தலானாலும் சரி, பாகிஸ்தானை ஏன் காங்கிரஸ் ஈடுபடுத்துகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றபோது, அந்த தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரிகளுடன் காங்கிரஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல், தற்போது ஜின்னா, திப்பு சுல்தான் ஆகியோர் மீது இருதரப்பும் பரஸ்பரம் அன்புகாட்டுகின்றனர். இந்திய அரசியலில் வெளிநாடுகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தப்பதிவுகளில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...