கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, கங்கை, யமுனை நதிகள் தூய்மை ஆக்கப்படும் என்று பாஜக. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத் துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது:
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் படி, இந்தியாவின் மிகவும் முக்கிய நதிகளான கங்கை, யமுனை நதிகளை தூய்மைப் படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.
மேலும் 20 சதவீத பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை மற்றும் யமுனை நதிகளின் கிளை நதிகளையும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.