வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல

அசாமில் தயாரிக்கப் பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில்,  40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அசாம் உடன்படிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்து போடப்பட்டது. அப்போது தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசாருக்கு எந்தபிரச்சினையும் இல்லை.

மேற்கு வங்காளத்தில் முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சியினருக்கு வங்கதேச ஊடுருவல் காரர்கள் வாக்கு வங்கியாக இருந்தனர். தற்போது அவர்கள் திரிணாமுல் காங்கிரசாரின் வாக்குவங்கியாக மாறிவிட்டனர்.

எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. நாட்டின் பாதுகாப்பைவிட வாக்கு வங்கிதான் முக்கியமா? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பதிவேடு மூலம் வெளிநாட்டு அகதிகள் நாடு கடத்தப் படுவார்கள் என கூறப்படுவது தவறு. இதன்மூலம் அகதிகளுக்கு எதுவும் நேரிடாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அகதிகளுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்காகவே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை (திருத்தம்) மசோதாவை கொண்டு வந்தது.

இங்கு, ‘வங்காளத்துக்கு எதிரான பா.ஜனதாவே வங்காளத்தை விட்டுவெளியேறு’ என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல. மாநிலத்தை தவறாக ஆட்சி செய்யும் மம்தாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும்தான் எதிரி.

எனது உரையை மக்கள் கேட்காமல் இருக்க மாநில அரசு பலஇடங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆனால் பா.ஜனதா தொண்டர்களே எனது உரையை மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...