பகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மனமில்லையே … !

1931 மார்ச் 23 ஆம் தேதியன்ற காந்திஜி டெல்லியில் உள்ள டாக்டர் எம்.ஏ. அன்சாரியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று அர் மௌன விரதம். அப்போது மதன்மோகன் மாளவியாவும், நேருஜியும் அங்க வந்தார்கள்.

மாளவியா கலக்கத்தோடு "காந்திஜி இன்று மாலையில் பகத் சிங்கையும், அவரது தோழர்களையும் தூக்கிலிடப்

போகிறார்களாம். இனியும் நாம் தாமதிப்பதற்கில்லை. நானும், நீங்களும், பட்டேலும், நேருவும் கையெழுத்திட்டு இங்கிலாந்து தந்தி அனுப்பலாம். உடனே புறப்பட்டுச் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சேரலாம். புறப்படுங்கள்" என்றார்.

உடனே காந்திஜி ஒரு பேப்பரில் எழுதி காட்டினார். "நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்து விட்டேன். இனிமேல் ஒன்றுமில்லை. ஆண்டவன் விட்ட வழி" என்று எழுதியிருந்தது.

இதைப் பார்த்தவுடன் நேருஜிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற காந்திஜிக்கு மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டினர்.

கராச்சி காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு.

அரசியலில் பலாத்காரம் கூடாது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் சேவைகளுக்கு நன்றி செலுத்தி அவர்களது மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் காங்கிரசால் அவர்களின் தீவிரச் செயலை அங்கீகரிக்க முடியவில்லை. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக பேசினார்.

காங்கிரசின் தீர்மானம் எதுவாக இருக்கட்டும், ஆனால் இந்த மாநாட்டுப் பந்தலில் வீற்றிருக்கிற எந்தத் தியாகிகளுக்கும், எந்தத் தலைவர்களுக்கும் அணுவளவும் குறைந்ததல்ல பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் தியாகமும் தேசபக்தியும் அவர்களின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அவர்களது செயலை அங்கீகரிக்க மறுப்பது என்னால் புரிந்து கொள்ளவில்லை.

காந்திஜி அவர்களே….. நீங்கள் ஒரு பெரிய மகான் என ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பகத்சிங் விஷயத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதத்தை எங்களல் ஜீரணிக்க முடியவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...