முன்பு பயங்கரவாதிகள் மக்களை கொன்றனர், இப்பொழுது பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர்

வருகிற மக்களவைத்தேர்தலில் தினம் ஒருபிரதமர் இருப்பார். ஆனால், ஞாயிறு மட்டும் விடுமுறை என பாஜக தேசியதலைவர் அமித் ஷா, புதன்கிழமை புது பட்டியலை வெளியிட்டார்.

 

 

உத்தரப் பிரதேசத்தில் அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளால் நமது மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். ராகுலுக்கும், காங்கிரஸுக்கும் அயோத்தி குறித்துபேச தகுதியற்றவர்கள். பிரதமர் மோடியின் அரசு ராமர் கோயிலுக்கு வழங்கிய 42 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் கட்சிதான் வழக்கு தொடர்ந்து தடுத்து விட்டது.

மகாகூட்டணி ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய பிரதமர் கிடைப்பார். அதன்படி,

திங்கள்கிழமை – மாயாவதி
செவ்வாய்கிழமை – அகிலேஷ் யாதவ்
புதன்கிழமை – மம்தா பானர்ஜி
வியாழக்கிழமை – சரத் பவார்
வெள்ளிக்கிழமை – தேவே கௌடா
சனிக்கிழமை – மு.க.ஸ்டாலின்

ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தநாட்டுக்கு விடுமுறை விடப்படும்

உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சிபணியாற்ற வேண்டும்.

மாயாவதி பல வீனமான அரசு வேண்டும் என்கிறார், அது ஊழலுக்குதான் வழி வகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்கமுடியும். எதிர்க்கட்சியினர் இது போன்ற தலைவரால் ஆட்சி செய்யப் படுவதை விரும்ப வில்லை.

2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்கமுடிந்தது என கூறப்பட்டது. இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெறசெய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கி விட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.

கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.