நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது

நாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும்.

இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் முதல் “இரும்பு மனிதர்” என அழைக்கப் படுகிறார்.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரது நினைவாக, அந்தமாநிலத்தில் சர்தார் சரோவார் அணை அருகே படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையை, அந்தமாநில பாஜக அரசு அமைத்துள்ளது.

அத்துடன், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை”யாக பாஜக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 31), பாஜகவின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக பாஜக சார்பில் சென்னையிலும் இன்று காலை இந்த யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் பிரபல நடிகையான கௌதமியும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை இவர், கடந்தஆண்டு சந்தித்து பேசினார். இந்த நிலையில், பேரணியில் கௌதமி இன்று பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கௌதமி, ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...