திமுக காங்கிரசின் நோக்கம் என்ன?

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனிதனை கடத்தபோது சாகடிக்கப்பட்டதாம்! என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள்!

இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்!

திமுக காங்கிரஸ் என்பது பிரிவினைவாத தேசத்துரோக கட்சிகளே!

இந்தியாவை தாய் நாடு என்று சொல்லாமால் துணைக்கண்டம் என சொல்வதுதான் திமுக! அப்படி என்றால் இந்த தேசத்தை இவர்கள் ஏற்கவில்லை என்பதுதான் பொருள்!

ஊழலை ஒழிக்கும் மோடியை அழிக்க ஒரு வழி காட்டுங்கள் என பாகிஸ்தானை கேட்பவர்கள்தான் காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள்! காங்கிரசின் மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானுக்கு சென்று மோடியை ஒழிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார் என்பது அனைவருமே அறிந்த விசயம்!

மோடி தேசத்திற்காக எதை செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது பாகிஸ்தான் பிராதமர் இம்ரான்கான்! தொடர்ந்து எதிர்ப்பது காங்கிரஸ் காரர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ” இது இந்தியாவுக்கு நல்லது அல்ல” என்று; ஒரு பிரச்சனையில் கருத்து சொன்னால், அடுத்த நாளே அதே கருத்தை காங்கிரசும் திமுகவும் சொல்கிறது! இது இந்த தேசத்தின் இறையான்மைக்கு நேர்ந்திருக்கும் ஆபத்தாகும்!

1947 ல் நாம் சுதந்திரம் அடைந்தோம் என்று சொல்லிக்கொள்கிறோம், ஆனால் அது உண்மையல்ல! 1947 ல் நாம் பிரிவினையானோம் என்பதுதான் உண்மை! இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை இஸ்லாமிய மத வாதத்திற்காக பிரித்துக்கொடுக்கப்பட்ட ஆண்டுதான் 1947.

இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது என்னும் காரணத்தை முன்வைத்து மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பிரித்துவாங்கி பாகிஸ்தான் பங்களாதேசம் என இஸ்லாமிய நாடுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள் இந்திய இஸ்லாமியர்கள்!

அதற்காக அவர்கள் சொன்ன ஒரே காரணம் இஸ்லாமியர்களான நாங்கள் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது என்பதுதான்!

பிரிவினை ஆனார்கள்! இஸ்லாமிய தேசத்தை உருவாக்கினார்கள்! அதோடு நிர்க்காமல் 1948 லும் 1965 திலும் இந்தியாவின் இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியாவோடு போர் தொடுத்தார்கள்! அவர்களின் தாய் நாட்டோடு போர் தொடுத்து பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள்! அந்த பகுதிகள் இன்றளவும் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என்னும் பெயரோடுதான் அழைக்கப்படுகிறது!

அதோடு மட்டும் நின்று விடாமல் பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் இருந்துக்கொண்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி மும்பை கோவை போன்ற இடங்களில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்துகிறார்கள்!

அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவி, இங்குள்ள பணம்வாங்கும் அரசியல்வாதிகளுக்கு பணம் தந்து ரேசன் கார்டு வாங்கி, வாக்காளர் சீட்டு வாங்கி காங்கிரஸ் திரினமுல் காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகளின் அடித்தள தொண்டர்களாக இடம்பிடித்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள், பிரிந்துபோன பாகிஸ்தான் முஸ்லீம்கள்!

1950 களிலேயே பாகிஸ்தானிலிருந்து தேர்தல் நிதி வாங்கிய கட்சிதான் திமுக!

1947 ல் பிரிவினை நடந்தபோது சொல்லப்பட்ட காரணம் அப்படியே இருப்பதால், அங்கிருக்கும் முஸ்லீம்கள் மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவி மீண்டும் பிரிவினை கோர வாய்ப்பளிக்கக் கூடாது என்பது இன்றைய இந்திய அரசின் இறையான்மை கொள்கை!

அதே நேரத்தில் பாகிஸ்தான், தாலிபான், பங்களாதேஸ் ஆகிய இஸ்லாமியத்தை பின்பற்றும் மத அடிப்படையிலான நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து பல துன்பங்களை அனுபவித்து கொடுமைகளை அனுபவித்து துன்பம் தாளாமல் அகதிகளாக ஓடி வந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கும், கிருஷ்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும், பார்சிகளுக்கும் இந்தியாவில் நிரந்தரமாக வாழ்ந்திட இந்திய குடியுரிமையை வழங்கிட கருணை உள்ளத்தோடு ஒப்புக்கொண்டிருக்கிறது இந்திய தேசம்!

10-12-2019 அன்று இந்திய நாடாளுமன்றத்திலும் 12-12-2019 அன்று இந்திய நாளாளுமன்ற மேலவையிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை உலக நாடுகளெல்லாம் மாபெரும் கருணை நடவடிக்கையாக பார்க்கின்றன!

இந்த தருணத்தில் இஸ்லாமிய தேசங்களில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கும் அகதி அந்தஸ்து கொடுத்து குடியுரிமை கொடுத்து மேலும் ஒரு மத அடிப்படையிலான பிரிவினைக்கு வித்திடுங்கள் என்பது காங்கிரஸ் மற்றும் திமுகவின் கோரிக்கையாக இருக்கிறது!

இந்த தேசத்துரோக கோரிக்கையை பாஜக அரசு எப்படி ஏற்க இயலும்?

இஸ்லாமிய சட்டங்களின் படி இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பாகிஸ்தானிலும், தாலிபானிலும், பங்களாதேசத்திலும், இஸ்லாமியர்களை எப்படி அகதிகளாக பார்க்க முடியும்?

ஊடுருவல் காரர்கள் உடனே வெளியேற வேண்டும் என்பதே பாஜக அரசின் கொள்கை!

தேர்தல் காலங்களில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பு விடுவார்கள்! அது என்ன தெரியுமா? இந்த தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத வெளியாட்கள் உடனே வெளியேறவேண்டும் என்பதே அந்த அறிவிப்பு!

ரேசன் கார்டும் வாக்குச்சீட்டும் கள்ளத்தனமாக பெற்றிருந்தாலும், 1952 க்கு பின்பு அங்கிருந்து இங்கு முறையற்ற முறையில் குடியேறிய ஊடுருவல் காரர்கள் வெளியேற வேண்டும் என்பதே இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் நியாயமான சட்ட நடவடிக்கையாகும்!

1947 ல் இந்துக்களோடு எங்களால் சேர்ந்து வாழ முடியாது என்று முஸ்லீம்கள் பிரிந்துபோனபோது எங்களால் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியும் என இங்கேயே தங்கிவிட்ட முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்கள்! இந்திய முஸ்லீம்களுக்கு 1952 ல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டபடி குடியுரிமை இருக்கிறது! அந்த குடியுரிமையை பாஜக அரசு ஆட்சேபிக்கவில்லை!

1952 க்கு பின்புகூட அங்கு சிறுபான்மையினராக துன்பங்களுக்கு ஆளாகி அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நாம் குடியுரிமை கொடுக்க முன்வந்திருப்பதே இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டமாகும்!

1952 க்கு பிறகு முறையற்ற முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவிய அன்னிய நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய குடியுரிமையை எப்படி வழங்க இயலும்?

முறையற்ற வகையில் ஊடுருவியவர்களிடம் உள்நோக்கம் இருக்கும்! சதி திட்டம் இருக்கும்! தேசத்துரோக சிந்தனை இருக்கும்! அவர்கள் இந்த தேசத்தவர்களாக இல்லாதபோது எப்படி அவர்களுக்கு தேசப்பற்று இருக்கும்? அகதிகளின் நிலை என்பது வேறு, ஊடுருவல்காரர்களின் நிலை என்பது வேறு!

திமுகவும் காங்கிரசும் இந்தியாவுக்கு எதிரானவர்களை ஆதரிப்பதன் நோக்கம் என்ன என்பதே இப்போதைய கேள்வியாகும்!

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனை கடிக்க வந்ததைப்போல இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் அதை செய்து இதை செய்து ஊழல் செய்து கடைசியாக தேசத்துரோகத்திற்கும் தயாராகிவிட்டதையே இன்றைட அரசியல் நிலை விளக்குகிறது!

— குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...