காவல் துறை அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கும் சமாதானத்தின் நண்பன்

மதம், ஜாதி என பாகுபாடுகாட்டாமல், அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கும் சமாதானத்தின் நண்பர்கள், என போலீசை புகழ்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

டில்லி போலீஸின் 73வது உயர்வு நாள் விழா இன்று (பிப்.,16) நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், விழாவில் பேசியதாவது: மதம் அல்லது ஜாதிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கவே போலீஸ் செயல் படுகிறது. இவர்கள் யாருடைய எதிரியும் அல்ல. சமாதானத்தின் நண்பர்களான இவர்கள், மதிக்கப்படவேண்டும். டில்லிக்கு செல்லும் போதெல்லாம், போலீஸ் நினைவு சின்னத்தை பார்வையிட்டு, தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம்செய்த 35 ஆயிரம் போலீஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தேசத்திற்காக இவர்கள் உயிரை கொடுத்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், அவர்களின் பணியின் தன்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்காகதான் போலீஸ் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

அதனாலேயே போலீசை விமர்சிப்பது நல்லதல்ல. டில்லி போலீசை இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேல்தான் தொடங்கினார் என்பது பெருமைக்குரிய விஷயம். இது இந்ததுறைக்கே முழு உத்வேகம் அளிக்கிறது என்பது உறுதி. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...