சம்ஸ்கிருதம் எந்த ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ மட்டும் சொந்தமானதள்ள

சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் நடந்த உலக சம்ஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: சம்ஸ்கிருத மொழி எந்த ஒரு இனத்துக்கோ

மதத்துக்கோ மட்டும் சொந்தமானது கிடையாது. குறுகிய மனப்பான்மையை ஒழிக்கக்கூடிய, விடுதலை உணர்வை வளர்க்கும் வகையிலான பண்பாட்டைப் பறைசாற்றும் மொழி .

சம்ஸ்கிருதத்தை நமது தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் அதனுள் பொதிந்திருக்கிறது. இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் மொழிகளுள் மிகப் பழமையானது சம்ஸ்கிருதம். இதை மதச் சடங்குகளுக்காகவும் வழிபாடுகளுக்காகவும் மட்டும் பயன்படும் மொழி என்று கருதிவிடலாகாது. அப்படிப்பட்ட தவறான புரிதல், கெüடில்யர், சரகர், சுஸ்ருதர், ஆரியப்பட்டர், வராகமிஹிரர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர் போன்றோரின் சீரிய சிந்தனைக்கும் படைப்புகளுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.

கணிதம், மருத்துவம், தாவரவியல், வேதியியல், கலை, மொழியியல் என அனைத்து வகையான அறிவுப் பொக்கிஷங்களையும் சம்ஸ்கிருதம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பல்வேறு ஆச்சாரியர்களும், அறிஞர்களும் தங்களது கருத்துகளையும் தத்துவங்களையும் புனிதமான வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பதிவு செய்திருக்கின்றனர்.

இன்றைக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கும், “உலகமே ஒரு குடும்பம்’ என்கிற கருத்தை விதைத்ததும் அவர்கள்தான். இந்த மொழியை வளப்படுத்தவும், பிரபலப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றார் பிரதமர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...