நமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி

பழைய தில்லி ரயில்நிலையத்தில், செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் மற்றும் சோப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், நாம்விரைவில் 11 மாதங்களை நிறைவு செய்யவுள்ளோம். அப்போதிருந்து, நம்மைபாதுகாக்கும் விதிமுறைகள், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி. நமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி.

இந்தசோப் மற்றும் முககவசம் வழங்கும் பின்னணியில் மிகப்பெரிய தகவல் உள்ளது. அந்த தகவலை பரப்புவதுதான் இதன் நோக்கம். மக்களிடம் பலவித வழிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. இவற்றை அமல்படுத்துவதில், சுமை தூக்குபவர்கள், வாடகை கார், ஆட்டோ சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், முககவசங்கள், பிபிஇ கவசஉடைகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இந்தியா தற்சார்பாக உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் தயாராகின்றன. தடுப்பூசி தயாரிப்பில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அது சரியானநேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...