ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றாக வேண்டும்

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற பேரவைத்தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும் என மதுரையில் பாஜக செய்திதொடர்பாளர் குஷ்பு பேசினார்.

மதுரை தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திர் வளாகத்தில் மதுரை மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல்விழா இன்று நடைபெற்றது. பாஜக பொதுச்செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டதலைவர் கே.கே.சீனிவாசன் வரவேற்றார்.

விழாவில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:

பிரதமர் மோடி மீது தமிழகமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியின் அனைத்து திட்டங்களும் தமிழகமக்களை சென்றடைந்துள்ளது. இதனால் பேரவை தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

பாஜக வளர்ந்துவருகிறது. திமுக, காங்கிரஸ் பயத்துடன் உள்ளன. இதனால் பெண்களைத் தவறாகபேசி வருகின்றனர். இரு கட்சிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சுத்தமானவர்கள் இல்லை. அந்தகட்சிகளில் இருந்ததால் அவர்களை பற்றி எனக்கு தெரியும். அவர்களின் வரலாறு என்னிடம் உள்ளது. ஆனால் வெளியே சொல்லமாட்டேன். பாஜகவில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.

கரோனா காலத்திலும் மக்களுக்கு உதவிய தலைவர்களில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஊழல் குறித்து நேரடிவிவாதம் நடத்த தயாரா என முதல்வர் விடுத்தசவாலை முக.ஸ்டாலின் ஏற்கவில்லை. நேரடிவிவாதத்துக்கு மு.க.ஸ்டாலின் நிபந்தனை விதிக்கிறார்.

இது அவருக்கு அழகா? மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நினைப்பு திமுகவுக்கு இல்லை. குடும்ப அரசியலை மட்டுமே திமுக செய்கிறது.

தமிழக காங்கிரஸில் 200 பேர்மட்டுமே உள்ளனர். அனைவருக்கும் பதவி கொடுத்துள்ளனர். இருக்கிற அனைவருக்கும் பதவிகொடுத்தால் வேலை செய்வது யார்? இதனால் பாஜக கஷ்டப்பட வேண்டியதில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் தெரிவித்தால்போதும் வெற்றிப்பெறலாம். மக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் கொண்வந்த திட்டங்கள்தான் காரணம்.

ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றார். ஜல்லிக்கட்டு என்றால் சும்மாவா. ஒரு நாள் மட்டும் நடத்திவிட்டு விட்டுவிடும் விழாவா? ஜல்லிக்கட்டு நமதுபாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் குழந்தைகளைபோல் வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக தேர்தலில் பாஜக வெற்றிப்பெறவேண்டும்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மைதரும். இதனால் யார் சொல்வதையும் கேட்காதீர்கள். பிரதமர் மோடி சொல்வதை மட்டும் கேளுங்கள். மோடி நல்லதைமட்டுமே செய்வார். தமிழ்மொழி மீது பிரதமர் மோடி அக்கறையுடன் உள்ளார். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

இவ்வாறு குஷ்பு பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...