உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்

உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடெங்கும் 2,934 மையங்களில் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்நாளில் இந்தியா முழுவதும் 300,000 சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

சீரம் பாரத் பயோடெக் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து 160 மில்லியன் மருந்துகளை அரசு வாங்கியுள்ளது. மருந்துகள் விமானம் மூலம் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 12 தலைநகரங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.

தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்கள் போன்ற அனைத்து தகவல்களை வழங்கும் கோ-வின் (CO-WIN) எனும் செயலியையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

முதல் கட்டத்தில் சுகாதார துறையினர், முன்கள பணியாளர்களுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், உலகில் ஆக அதிகளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும்நாடுகளில் ஒன்றான இந்தியா, 20 மில்லியன் கொரோனா கிருமிதடுப்பூசி மருந்தை அதன் அண்டை நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீஷெல்ஸ், மொரீசியஸ் ஆகியநாடுகளுக்கு வழங்குவதற்காக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை வாங்கும் என்று செய்திகள் தெரிவித்தன. உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 விழுக்காட்டை இந்தியா உற்பத்திசெய்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...