உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்

உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடெங்கும் 2,934 மையங்களில் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்நாளில் இந்தியா முழுவதும் 300,000 சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

சீரம் பாரத் பயோடெக் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து 160 மில்லியன் மருந்துகளை அரசு வாங்கியுள்ளது. மருந்துகள் விமானம் மூலம் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 12 தலைநகரங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.

தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்கள் போன்ற அனைத்து தகவல்களை வழங்கும் கோ-வின் (CO-WIN) எனும் செயலியையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

முதல் கட்டத்தில் சுகாதார துறையினர், முன்கள பணியாளர்களுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், உலகில் ஆக அதிகளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும்நாடுகளில் ஒன்றான இந்தியா, 20 மில்லியன் கொரோனா கிருமிதடுப்பூசி மருந்தை அதன் அண்டை நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீஷெல்ஸ், மொரீசியஸ் ஆகியநாடுகளுக்கு வழங்குவதற்காக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை வாங்கும் என்று செய்திகள் தெரிவித்தன. உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 விழுக்காட்டை இந்தியா உற்பத்திசெய்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...