கொரோனா தடுப்பூசி இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்த சொத்து

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனில் முக்கியபங்கு வகிக்கும் இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்தசொத்து என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்து கண்டறியப்பட்டு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்புமருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இதுவரை சுமார் 55 லட்சம் டோஸ் மருந்துகளை தனது அண்டை நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அளித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா தனது தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்திசெய்து வருகின்றது.

உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி விநியோகிப்பதில் இந்தியா முக்கியபங்கு வகிக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன்தான் உலகுக்கு கிடைத்துள்ள மிக சிறந்தசொத்து. உலகம் அதை புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உற்பத்திசெய்ய ஏதுவாக லைசென்ஸ் வழங்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...