தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனாபரவல் மீண்டும் அதிகமாகி வரும் நிலையில், காலநேரமின்றி 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சிலமாதங்களாக படிப்படியாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல், கடந்த சிலநாட்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கிவைத்தார்.

இதில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணைநோய் உடைய 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்படுகிறது. இதற்காக, கோ-வின் 2.0 செயலிமூலம் மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துவருகின்றனர். மேலும், நேரடியாக வந்து தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இந்தமாநிலங்களின் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று வெளியிட்ட டி விட்டர் பதிவில், “தடுப்பூசி போடுவதற்கான காலநேரத்தை அரசு நீக்கி உள்ளது. மக்கள் தங்களின் வசதிக்கேற்ப, 24 மணி நேரமும் அரசு, தனி்யார் மருத்துவமனைகள், மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்,’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...