இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல் -வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து

‘இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்,’ என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இன்று 2வது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை காண, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றது.

அவர்கள், தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். வாக்காளர்கள் மத்தியில் நிலவும் உற்சாகம், வேட்பாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தனர்.

பார்வையாளராக வந்திருந்த அமெரிக்க குழு துணை தலைவர் ஜோர்ஹன் ஆண்ட்ரூஸ் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நேரில் காணும் போது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகளை காணவும் ஆர்வம் மிகுதியாக உள்ளது.
இதை காணும் போது இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.கொரியா நாட்டு பிரதிநிதி சாங் வூ கூறுகையில், ”இளஞ்சிவப்பு (பிங்க் நிறம்) ஓட்டுச்சாவடியில் செயல்படும் நிர்வாகிகள் அனைவரும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி அளித்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.

காஷ்மீருக்கு நாங்கள் வந்தது இது தான் முதல் முறை. வெளிநாட்டு பிரதிநிதியாக இங்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இடங்கள் மிகுந்த அழகாகவும், மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் உள்ளனர்,” என்றார்.

சிங்கப்பூர் பிரதிநிதி செங் வீ வீ ஆலிஸ் கூறுகையில், ”நான் இங்கு ஓட்டு போடுபவர்களை பார்த்தேன். சிங்கப்பூரில் இதே மாதிரி நடைமுறையை கொண்டு வர முயற்சிப்போம். இங்குள்ள அரசு கட்டிடங்களை ஓட்டுச்சாவடிகளா பயன்படுத்துவது, அது வாக்காளர்கள் எளிமையாக பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...