பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து நிதின்கட்கரி விலகினார். புதியதலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்ப்போது பாஜக தலைவராக நிதின்கட்கரி உள்ளார். கட்சி தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில், தாம் தேர்தலிலிருந்து விலகிக்கொள்வதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை டில்லியில் பா.ஜ.க., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்கு முன், பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானியை சந்தித்த ராஜ்நாத்சிங், பின்னர் நிதின் கட்காரியுடன் எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் புதியதலைவர் தேர்வு குறித்து பேசினர். இறுதியாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்துதெரிவித்தார். மேலும், ராஜ்நாத் கட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் முதிர்ந்த அனுபவம் உள்ளவர் என்று பாராட்டு தெரிவித்தார். மேலும், பதவியில் இருந்து வெளியேறும் கட்காரிக்கு நன்றிதெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
இதையடுத்து, புதிய தலைவருக்கான வேட்புமனுவை ராஜ்நாத்சிங் தேர்தல் அதிகாரியான கெலாவட்டிடம் தாக்கல்செய்தார். அவருடன், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜ்நாத்சிங்கை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதைதொடர்ந்து ராஜ்நாத்சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை பா.ஜ.க, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2005-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை பாஜக தலைவராகப் பதவி வகித்துள்ளார். இவர் ஏற்க்கனவே மத்திய அமைச்சராவும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.