பா.ஜ.க., வின் பிரதமர்வேட்பாளர் மே மாதத்தில் விடை கிடைத்து விடும்

பா.ஜ.க., வின் பிரதமர்வேட்பாளர்  மே மாதத்தில் விடை கிடைத்து விடும் பா.ஜ.க., வின் பிரதமர்வேட்பாளர் யார் எனும் கேள்விக்கு அடுத்தமாதம் விடை கிடைத்து விடும் என்றும் . மே மாதத்தில் கட்சியின் பிரதமர்வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; கர்நாடக சட்ட சபை தேர்தலுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளேன்; மேலும் பா.ஜ.க., வின் பார்லிமென்ட்குழு கூடி கட்சியின் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒரு வகுப்புவாத தலைவர் என்பதை ஏற்றுகொள்ள முடியாது . கட்சியின் அதிக புகழ் பெற்ற தலைவர்களுள் மோடியும் ஒருவர் .

மோடி குறித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது . பா.ஜ., வில் யாரும் வகுப்பு வாதிகள் அல்ல; எங்களுடையது மதசார்பற்றகட்சி மட்டுமே; அனைத்து மனிதர்களையும் நாங்கள் சமமாகவே கருதுகிறோம்;

இனம், மதம், மொழி என்று யாரையும் பிரித்து பார்ப்பதில்லை; மோடியின் மீது எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை; அப்படி அவர் தவறுசெய்திருந்தால், பெருவாரியான ஓட்டுக்களை பெற்று தொடர்ந்து 3 வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைக்க முடியுமா; அவர் நாடுமுழுவதும் அனைத்து சமூக மற்றும் அனைத்து பகுதி மக்களிடமும் புகழ்பெற்றவர்; பா.ஜ.க, எந்தபதவிக்கும் யாருக்கும் போட்டியில்லை; பா.ஜ.க., கூட்டணியில் இருந்து யார் பிரிந்துசென்றாலும் அது பா.ஜ.,வை எந்தவிதத்திலும் பாதிக்காது. என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...