கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் எம்பி., எம்எல்ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடிதீர்ப்பை வழங்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து கட்சிகளும், குற்றப்பின்னணி கொண்ட எம்பி., எம்எல்ஏக்களும் மீளும் முன்பாக,
உச்சநீதிமன்றம் ‘சிறையில் அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிடமுடியாது’ என நேற்று மீண்டும் ஒரு அதிரடிதீர்ப்பை அளித்தது.
‘போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது’ என்று பாட்னா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தலைமைதேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் ஏகே.பட்நாயக், முகோபாத்யா டிவிஷன்பெஞ்ச் இதை விசாரித்து நேற்று அளித்ததீர்ப்பில், ”வாக்களிக்கும் தகுதியுடைய வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடமுடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 4, 5ல் தெளிவாக வரையறுக்க பட்டுள்ளது. சிறையில் அல்லது போலீஸ்காவலில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 62(5)ன்படி வாக்களிக்க முடியாது. இதனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்” என்று உத்தரவிட்டனர்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.