மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்கான ஒருங்கிணைப்பு உத்திகுறித்து ஆலோசனைக்கூட்டம்

 மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்கான ஒருங்கிணைப்பு உத்திகுறித்து விவாதிப்பதற்காக பா.ஜ.க, ஆர்எஸ்எஸ்., விஎச்பி. மற்றும் ஹிந்து அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அடுத்த மக்களவைத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்த 2 நாள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியுள்ளது.

தில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர்களான அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மாஸ்வராஜ், முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வி.எச்.பி. சார்பில் பிரவீண் தொகாடியாவும், ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, கூடுதல் பொதுச் செயலாளர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோஸ்போலே ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹானும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் திங்கள்கிழமை கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவைதேர்தலுக்காக வட்டார நிலையில் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சங்பரிவார் அமைப்புகளுடன் சிறப்பான ஒருங்கிணைப்புக்கான உத்தியை வகுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...