பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு திட்டமிட்டு வேண்டும் என்றே தொல்லைகொடுக்கிறது என பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தியுள்ளார். .
பீகார் மாநில முன்னாள் முதல்வர் சதீஷ்பிரசாத் பாஜக.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்கான நிகழ்ச்சிக்குபிறகு ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கினார். மேலும் முன்னாள் ராணுவ தலைமைதளபதி விகே. சிங்கிற்கு ஆதரவாகவும் அவர் கருத்துதெரிவித்தார்.
விகே. சிங் பதவியில் இருந்தபோது அவருக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. ஓய்வுபெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்துவது ஏன்? என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன் விகே. சிங் ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பிறகுதான் காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தினார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.