ராகுல் காந்தியின் அனுதாபம் திரட்டும் முயற்சி கேவலமானது

 ராகுல் காந்தி தானும் கொல்லப்படலாம் என்று பேசி அனுதாபம்திரட்டும் முயற்சியில் பேசியுள்ளது கேவலமாக உள்ளது. பா.ஜ.க.,விற்கு எதிரான உணர்வைதூண்டும் விதமாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். என்று பாஜக. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; தற்போது ஓட்டுக்களைபெறுவதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே ராகுல் காந்தி மீது காங்கிரஸ் கட்சியே தாக்குதலை மேற்கொண்டு பா.ஜ.க.,தான் காரணமென கூறுவார்கள். இதற்கு ராகுல் காந்திக்கு தகுந்த போலீஸ்பாதுகாப்பு வழங்கவேண்டும்.

மதவெறியை தூண்டுவது காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் அனைவரும் பாரததாயின் குழந்தைகள் என பாஜக, ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் இஸ்லாமியர்களை கொம்புசீவிவிட்டு வருகிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகிவருகிறது. புதியவாக்காளர்கள் நரேந்திரமோடியை விரும்புகிறார்கள்.

சமீபத்தில் வெளியான கருத்துகணிப்பில் தமிழகத்தில் 2 சதவீதமாக இருந்த வாக்குவங்கி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்தபிறகு 10 சதவீதமாகியுள்ளதாக தெரிவிக்கிறது. தமிழகத்தில் 1967ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

அதன் பிறகு தி.மு.க, அ.தி.மு.க மாறிமாறி ஆட்சிசெய்து எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாற்றுசக்தியாக பாஜக தலைமையில் மாற்று அணி அமையக் கூடுமென்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. பாரதநாட்டின் பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாத்தே, வல்லரசாக வேண்டுமென்பதே பா.ஜ.க.,வின் நிலைபாடு.என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...