பாட்னா குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைது

 பாட்னாவில் நரேந்திரமோடி கூட்டத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைதுசெய்த மங்களூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகார்போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

சென்ற மாதம் 27ம் தேதி பீகார்தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் குண்டுகள்வெடித்து 7பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தைசேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித்சாயப், அன்சாரி கான் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5கோடி ஹவாலாபணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின்மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது. புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்தபெண் ஆஷா என்கிற ஆயிஷாபானு என தெரியவந்தது.

கணவர் ஜூபேருடன் . மங்களூரில் குடியிருந்த இவர் தனது கணவருடன் சேர்ந்து ஹவாலா பறிமாற்றம் செய்துவந்தார். இந்நிலையில், இவரது கணக்கிற்கு 5 கோடி வந்துள்ளது. இதை அவர் வெவ்வேறுபெயர்களில் உள்ள வங்கிகணக்குகள் மூலமாக பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் வங்கிகணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து மங்களூரில் பதுங்கியிருந்த ஆயிஷாபானு, ஜூபேரை போலீசார் கைதுசெய்தனர். இருவரையும் நேற்றுகாலை மங்களூர் 3வது கூடுதல் விரைவுநீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும் படி, நீதிமன்றத்தில் பீகார் காவல்துறையின் அனுமதியைகேட்டனர். இதை ஏற்றுகொண்ட நீதிபதி, இருவரையும் பீகார்போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பீகார் காவல்துறையினர் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...