வல்லபபாய் படேல் குறித்து கலை இலக்கிய போட்டி தமிழக அரசிடம் கோரிக்கை

 முன்னாள் துணைப்பிரதர் வல்லபபாய் படேல் குறித்து கலை இலக்கிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த உதவிடவேண்டும் என்று தமிழக அரசிடம் குஜராத் மாநில அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங் கரையில் முன்னாள் துணைப்பிரதமர் வல்லபபாய் படேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச்சிலை அமைக்கும் பணிகளை அந்த மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இரும்புசேகரிக்கும் பணிக்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் அவர்கள் பயன் படுத்திய இரும்பு உபகரணங்களை திரட்டும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இரும்புசேகரிக்கும் பணி தொடர்பாக தமிழக பா.ஜ.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் அது குறித்த பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கான பயிற்சி  சென்னையில் வியாழக் கிழமை நடைபெற்றது. இதில்  குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் ரஜனி காந்த் படேல், தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், செய்தித்துறை அமைச்சர் கேடி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் குஜராத்மாநில அமைச்சர் ரஜனி காந்த் படேல் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, வல்லபபாய்படேல் குறித்து இளைஞர்களும், மாணவ-மாணவிகளும் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்த தமிழக அரசு உதவிடவேண்டும் என்று ரஜனி காந்த் படேல் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வேண்டுகோள் கடிதத்தையும் அவர் அளித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...