ஆம் ஆத்மி அரசு அதனுடைய முரண்பாடுகளினால் விரைவில் கவிழும்

 ஆம் ஆத்மி அரசு அதனுடைய முரண்பாடுகளினால் விரைவில்கவிழும். எனவே, இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் தயாராக இருக்கவேண்டும்’ என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவை பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்துகொண்டு பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

தூய்மையான அரசியலைப்பேசும் ஆம் ஆத்மி கட்சி, ஊழலில் திளைத்துப்போன காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது முட்டாள்தனமானது. இந்த ஆட்சி அதனுடைய சொந்த முரண்பாடுகளினாலேயே கவிழ்ந்து விடும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களை ஆம் ஆத்மிகட்சி விசாரிக்கும் போதுதான், இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான “ஒப்பந்தம்’ தில்லி வாசிகளுக்கு தெரியவரும்.

ஷீலாதீட்சித் அரசில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காலக்கெடுவுடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். தவறுசெய்தவர்களை புதிய அரசு தண்டிக்கவேண்டும். தில்லிக்கு மாநில அந்தஸ்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றுத்தரவேண்டும்.

பதவியேற்பு விழாவுக்கு கேஜரிவால் மெட்ரோ ரயிலில் பயணம்செய்வது குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர் மெட்ரோவில் சென்று தான் துவாரகாவில் படித்துவரும் அவருடைய பிள்ளைகளைப் பார்த்துவருகிறார். இதை அவர் நீண்டகாலமாகவே பின்பற்றி வரும் நிலையில், பதவியேற்பு விழாவுக்கு மெட்ரோவில் செல்வதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்றார் ஹர்ஷ்வர்தன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...