விஜயகாந்த் நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வந்து விடுவார்

 உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தே.மு.தி.க தனித்து போட்டியிடலாம் என்று தொண்டர்கள் தெரிவித்திருப்பதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினாலும் நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வந்து விடுவார் என்று தமிழக பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க.,வின் முடிவு குறித்தும் ஆலோசிக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க நிச்சயம்வரும் என்ற நம்பிக்கை தற்போதும் எங்களுக்கு உள்ளது என்றார்.

இதே போன்று தமிழருவி மணியனும் பா.ஜ.க அணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என தொண்டர்களிடம் விஜய காந்த் கருத்துகேட்டார். தொண்டர்கள் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறினர். ஆனால் விஜயகாந்த் எந்தகருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதே சமயம் தொண்டர்கள் கூறும் கருத்தை தலைவர் மாற்றுவதற்கும் வாய்ப்புண்டு என்று அவர் கூறியுள்ளார். அதனால் விஜய காந்த் இன்னும் முடிவுசெய்யவில்லை என்று தெரிகிறது. பா.ஜ.க கூட்டணிக்கு நிச்சயம் அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...