அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மதச்சார்பின்மை வார்த்தையை காங்கிரஸ் பயன் படுத்துகிறது

 காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இப்போது திடீர் என்று கடவுளை குறிப்பிட்டு அடிக்கடி பேசிவருகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், காலிலாபாத் என்ற இடத்தில் நரேந்திரமோடி மேலும் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் விக்கெட் ஒவ்வொன்றாக சரிந்துவருகிறது. கடந்த 20 25 ஆண்டுகளில் சோனியாகாந்தி கடவுள் பெயரை குறிப்பிட்டு பேசியதாக நான் அறியவில்லை. இப்போது கடவுளை வேண்டுகிறார் என்றால், காங்கிரஸ் எத்தகைய பிரச்சினையை சந்தித்து வருகிறது என்பதை நீங்கள் நினைத்துப்பாருங்கள். காங்கிரஸ் தலைமையிலான இப்போதையை அரசு மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. புதிய அரசு அமைவதற்கான வலுவான அடித்தளம் இந்த தேர்தலில் அமைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் என்னை தாக்கிப்பேசிவருகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த வார்த்தையை காங்கிரஸ் பயன் படுத்துகிறது. உங்களின் மகிழ்ச்சிக்காக நான் போராடுகிறேன். அவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக போராடுகின்றனர்.

நிலம், சுரங்கம், ஆகாயம், தண்ணீர் என ஒவ்வொரு துறையிலும் சுரண்டல்மூலம் பெருமளவு ஊழல் செய்து, இந்நாட்டை ஊழல் மிகுந்த நாடாக காங்கிரஸ் மாற்றிவிட்டது. உலகின் ஊழல் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தே.ஜ.,கூட்டணி ஆட்சியில் 6 ஆண்டுகளில் 6 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் தனது 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று கூறியிருந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 1.5 கோடி பேருக்குகூட வேலை வாய்ப்பு வழங்கப் படவில்லை. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் உங்கள் நலனுக்காக செய்த ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுசொல்லுங்கள். டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது தான் அவர்கள் செய்யும் ஒரேசெயல்.

உபி.யில் உள்ள தந்தைமகன் அரசு டெல்லியில் உள்ள தாய் மகன் அரசை இந்த முறை காப்பாற்ற முடியவில்லை. இதனால் தான் அடிக்கடி சோனியா கடவுளை வேண்டுகிறார். இதிலிருந்து அவர்களின் பிரச்சினை எத்தனை பெரியது என்பதை நீங்கள் உங்களால் முடியும் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...