மது அருந்தி விட்டு பணிக்குவர தடை

 ரயில் ஓட்டுநர்களும், பிற பணியாளர்களும் மது அருந்தி விட்டு பணிக்குவருவதை தடுப்பதற்காக, அவர்களுக்கு கட்டாய சுவாச பரி சோதனையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது .

இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள புதிய செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில் ஓட்டுநர்கள், அவர்களது உதவியாளர்கள், ரயில்வே நிலையங்களை நிர்வகிப்பவர்கள், ரயில்களில் பயணிகளுக்கு சேவை யளிப்பவர்கள் ஆகியோர் தினமும் பணிக்கு வரும் போது அவர்கள் சுவாச பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது.

பணியாளர்கள் குடித்திருந்தது தெரியவந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக பணிநீக்கம், ஒரு ஆண்டு வரையிலான சிறை தண்டனைகள் விதிக்கப்படும்.

ரயில்வேயில் பணியாற்றும் 83,000 ஓட்டுநர்கள் ,உதவி ஓட்டுநர்களுக்கும், பிறபணியாளர்கள் சுமார் 10 லட்சம் பேருக்கும் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படும்.

பணியாளர்களின் குடிப்பழக்கம் குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து பதிவுசெய்யும்படி அனைத்து மூத்த அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுவர். எந்த தற்காலிக ஊழியராவது குடிப்பழக்கத்துக்கு அடிமையானவராக தெரிந்தால், அவருக்கு பணிநிரந்தரம் வழங்கப்படக்கூடாது என்று புதிய விதிமுறை கூறுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...