பா.ஜ.க. வேட்பாளர் தேர்வுகுறித்து ஆராய குழு

 தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி வருவதாகவும், பா.ஜ.க. வேட்பாளர் தேர்வுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், உள்ளாட்சிக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசி வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியினை செய்து வருகிறது.

கட்சி சார்பில் போட்டியிடும் மாநகர் மன்ற உறுப்பினர், நகர்மன்ற உறுப்பினர், பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் ஒன்றிய பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரையும், கட்சியின் ஆதரவோடு போட்டியிடும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட மையக்குழு பட்டியல் தயாரித்து மாநிலத்திற்கு அனுப்புவார்கள்.

மாநகராட்சி மேயர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து கருத்து அறிந்திட இரண்டு குழுக்கள் அமைக்கப்படுகிறது. கே.என்.லட்சுமணன், சரவணபெருமாள், வைரவேலு ஆகிய 3 பேர் குழு கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குன்னூர், விருத்தாசலம், அரக்கோணம் ஆகிய நகர் மன்ற தலைவர் வேட்பாளர் குறித்தும், சுப.நாகராஜன், திருமலைசாமி, எஸ்.சுரேந்திரன் ஆகிய குழு நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் கொடைக்கானல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் குறித்தும் கருத்துக்களை கேட்டு அறிவார்கள்.

அனைத்து இடங்களுக்கும் கருத்து கேட்டு, இதில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு, பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...