புதிதாக பதவி ஏற்ற மந்திரி களுக்கு இலாகா ஒதுக்கீடு

 மராட்டியத்தில் புதிதாக பதவி ஏற்ற மந்திரி களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் போலீஸ், நகரவளர்ச்சி, வீட்டுவசதி, சுகாதார துறைகளை வைத்துகொண்டார். சுதீர் முங்கண்டிவாருக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் பா.ஜ.க அரசு கடந்த 31ந் தேதி அமைந்தது. அப்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் 10 பேர்கொண்ட மந்திரிசபை பதவி ஏற்றது. ஆனால் புதியமந்திரிகள் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரிந்துரையை ஏற்று நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் புதியமந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடுசெய்து உத்தரவிட்டார்.

 

அதன் விவரம் வருமாறு:–
முதல்–மந்திரி

1. முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் – போலீஸ், நகரவளர்ச்சி, வீட்டுவசதி, சுகாதாரம்.

2. ஏக்நாத் கட்சே:– வருவாய், சிறுபான்மை யினர் மேம்பாடு, வக்பு, விவசாயம், கால் நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் கலால் துறை.

3. சுதீர் முங்கண்டிவார்: – நிதி, திட்டம், வனத் துறை.

4. வினோத் தாவ்டே: – பள்ளிக்கல்வி, உயர் கல்வி, தொழில் மற்றும் மருத்துவகல்வி, விளையாட்டு, மராத்தி மொழி மற்றும் கலாசாரம்.

5. பிரகாஷ் மேத்தா:– தொழில் மற்றும் சுரங்கம். பாராளுமன்ற விவகாரம்.

6. சந்திரகாந்த் பாட்டீல்:– கூட்டுறவு, சந்தை, ஜவுளி, பொதுப் பணி.

7. பங்கஜா முண்டே:– கிராமவளர்ச்சி, தண்ணீர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்.

8. விஷ்ணு சவரா:– பழங்குடியினர் மேம்பாடு, சமூகநீதி, சிறப்பு உதவிகள்.
இணை மந்திரிகள்

9. திலீப் காம்பிளே:– பழங்குடியினர் மேம்பாடு, சமூக நீதி, சிறப்பு உதவிகள்.

10. வித்யா தாகூர்:– கிராம வளர்ச்சி, தண்ணீர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்.
பாக்ஸ் கிராம வளர்ச்சி இலாகாவை விரும்பிய பங்கஜா முண்டே.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...