ஒற்றுமையான சூழலே தேசத்தை வெற்றிகரமாக முன்னகர்த்தும்

 மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற 40வது சர்வதேச சமூகசேவை அமைப்புகளின் மாநாட்டு தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:

இது தான் தேசத்துக்கு உகந்த தருணம். இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய ஒவ்வொருவரையும் தகுதியாக்கி கொள்வதற்கான நிலையை நோக்கி இந்தியா நடை போடுகிறது.

மத்தியில் அதிகார மாற்றம் ஏற்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் செயல் பாடுகள் மாற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் இது போது மானதல்ல. இத்தேசம் மேலும் வெற்றிகரமானதாக மாற, ஒட்டு மொத்த சமூகமும் எழுச்சி பெறவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே அரசின் சாதனைகள் முழு பயனுள்ளதாக இருக்கும். சமூகம் மற்றவர்களுக்காகவும் தேசத்துக்காகவும் தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

கார்கில்போரின் போது, பாகிஸ்தான் படைகள் நம்மை விட உயரமான பகுதியில் இருந்த போதும் நாம் வெற்றி பெற்றோம். அதற்குக்காரணம் ஒட்டுமொத்த மக்களும் நமது ராணுவத்துக்கு ஆதரவளித்தார்கள். அதுபோன்ற ஒற்றுமையான சூழலே தேசத்தை வெற்றிகரமாக முன்னகர்த்தும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...