மக்கள் முதல்வரின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக செயல்பட வேண்டும்

 சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் போது போலீசாரால் தடிஅடி நடத்தப்பட்டு, அதன் காராணமாக காயம் அடைந்த மாணவர்களைப் பார்க்க இன்று அரசு மருத்துவமனை சென்றேன். மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அங்கு ஓர் பதற்றமான சூழ்நிலை

உருவாவதை காவல்துறையினர் உணர்ந்திருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும், மாணவர்கள் தாங்கள் பயிலும் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மாற்றக் கூடாது என்று கோரிக்கையுடன் முதலமைச்சரைச் சந்திக்க முயன்றிருக்கிறார்கள்.

முதலமைச்சர் அவர்களைச் சந்தித்திருந்தால், இந்த போராட்டம், அதனால் போலீஸ் தடிஅடி, அதனால் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம,; பொது மக்களின் இயல்பு நிலை பாதிப்பு என தொடர்ச்சியாக நடந்த பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.

மாணவர்கள் அதே வளாகத்தில் இருந்தால், தாங்கள் வழக்கறிஞர்களையும், வழக்குகளையும் தெரிந்து கொண்டு ஆக்கமும் ஊக்கமும் பெறுவோம் என்று சொல்கின்றனர். கட்டிடம் செப்பணிடப்பட வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம், விடுமுறை தினங்களில் நவீன வசதிகளோடு அதை செப்பனிடலாம். இல்லை எனில் உண்மைநிலையை மாணவர்களுக்கு எடுத்துக் கூறலாம். இவையெல்லாம் செய்யாமல் மாணவர்கள் மீது தடியடி நடக்கும் அளவிற்;கு விட்டது காவல்துறையினர்; மற்றும் அரசின் தவறாகும். ஆக மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி நிலைபற்றி முழுவதுமாக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழக அரசின் மெத்தனம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. உதாரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையை நான் பார்க்கச் சென்ற போது மருத்துவமனையின் எலும்புமுறிவு பிரிவில் கூட பலர் தரையில் படுத்துக்கிடக்கும் நிலைதான் இன்னும் நிலவுகிறது. அது மட்டுமல்லாமல,; பல நோயாளிகள் என்னிடம் வந்து தங்கள் குறைகளைச் சொன்ன போது ஓர் மருத்துவர் என்ற முறையில் நான் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகளின் சேவைகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதும், குறிப்பாக புதிய சட்ட மன்ற கட்டிடத்தில் இயங்கும் பல்நோக்கு மருத்துமனைக்காவது சில துறைகளை மாற்றி, அங்கு இருக்கும் அபரிதமான இடம் நோயாளிகளுக்கு பயன்பட்டு அதன் மூலம் நோயாளிகள் தரையில் கிடந்து தவிர்க்கும் நிலையாவது தடுக்கப்படுமா என்பதை ஆராய வேண்டும். அதே போல அதிக விபத்துகள் நடக்கும் குரோம்பேட்டை மருத்துவனையில் X-Ray கருவிகள் வேலை செய்யவில்லை.

எல்லாவற்றிக்கும் மேலாக, ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியதற்குக் காரணம் அங்கு 20 நாட்களுக்கு ஓர் முறை குடிதண்ணீர் விநியோகம் செய்ததுதான் காரணம் என்ற சுகாதாரத்துறை ஆய்விலேயே தகவல் வந்திருக்கிறது.

அன்றாடம் தன் வாழ்விற்கு பிழைக்கும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கடைகளிலும் பிரச்சினை, ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தினால் பொது மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று திருவொற்றிய+ர் MRF தொழிலாளர்களான திரு. வெங்கடேசன், திரு. ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல தொழிலாளிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை நேரில் சென்று பார்த்தேன். அரசு தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

சமீபத்தில் ராணிப்பேட்டையில் தோல்தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. மாசுகட்டுபாடு வாரியம் செயலிழந்திருப்பதாகக் காட்டுகிறது. ஆக எல்லாத் துறைகளிலும் அரசு எந்தக் கவனமும் செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. அத்துடன் தமிழகத்தில் பெருகி வரும் கொலை கொள்ளைகள், காவல்துறை செயலிழந்திருப்பதையே காட்டுகிறது.

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படாமல் இருக்கும் அரசு என்ற நிலையில் மாற்றம் கொண்டு வந்து,; உண்மையில் மக்களின் முதல்வரின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...