ஆம் ஆத்மி அரசுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

 முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி அரசுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்,'' என, டில்லி போலீசுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

டில்லி போலீசின், 68வது உதய தின அணி வகுப்பு, டில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

டில்லியில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில், புதியகட்சி ஒன்று, மக்களின் ஆதரவைப் பெற்று, அரசு அமைத்துள்ளது; அந்த அரசுக்கு, டில்லி போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்; அப்போதுதான், டில்லி நகரம் மேம்பாடு அடையும். 'கட்சிபாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும், முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அப்போதுதான், ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பு மூலம், உலகில் சக்திவாய்ந்த நாடாக, இந்தியா உருவாகும்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார். அதனால், டில்லி அரசுக்கு, போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.

டில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சட்டம் – ஒழுங்கை பேணிக் காக்கவும், வளர்ச்சிப் பணிகள் சமூக விரோத சக்திகளால் தடைபடாமல் தடுக்கவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். டில்லியில் சமீபத்தில், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல், டில்லி போலீஸ் கமிஷனரும் மற்ற அதிகாரிகளும் பார்த்துக்கொள்ள வேண்டும். டில்லியில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். அதனால், சிறியவிஷயங்கள் கூட, தேசிய அளவிலான செய்திகளாகவும், பெரியசம்பவங்கள், சர்வதேச செய்திகளாகவும் மாறிவிடும். எனவே, டில்லி போலீசார் தங்களின் கவுரவத்திற்கு பங்கம்வராத வகையில், நடந்துகொள்ள வேண்டும். என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.