மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது

 பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தருகிறது, என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

நெல்லை கிழக்குமாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று நெல்லைக்குவந்தார். அவர் வண்ணார் பேட்டை சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை தமிழர்கள் வரலாற்றில், பிரதமர் மோடியின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதியநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு 13–வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் மோடி பயணம்குறித்து விமர்சனம் செய்கிறார்கள். எந்த ஒருமுயற்சியும் உடனடியாக பயன்தராது. பிரதமர் செய்திருப்பது ஒருமுயற்சி, இதற்கு பலன்கிடைக்க நாளாக, நாளாக தெரியும்.

இலங்கை பயணம் தொடர்பாக மோடி என்னிடம் பேசினார். அப்போது இலங்கை தமிழர்களின் தேவை குறித்து தெரிவித்தேன்.

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, மோடி சந்தித்தது குறித்து விமர்சித்து உள்ளார். எந்த ஒருநாட்டுக்கு தலைவர்கள் செல்லும்போதும் அங்கு ஆட்சியில் இருப்பவர்களையும், ஆட்சியில் இருந்தவர்களையும் சந்திப்பது மரபு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் பிரதமரை சந்திப்பதுபோல் காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்கிறார்கள். அதே போல்தான் மோடி –ராஜபக்சே சந்திப்பும் நடந்துள்ளது.

இலங்கை தமிழர்கள் சகஜநிலையில் சுதந்திரமாக வாழ வேண்டும். அங்குள்ள ராணுவம் விலக்கப்பட வேண்டும். இதைத்தான் பா.ஜனதா அரசு இலங்கையிடம் வலியுறுத்துகிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில், அதிமுக. உள்ளிட்ட பல கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்தார்கள். அதன்படி 6 திருத்தங்களை கொண்டுவந்த பிறகுதான், நாட்டின் நலன் கருதியே அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அதிமுக. ஆதரித்து இருப்பதை வரவேற்கிறோம். அரசியல் காரணத்துக்காக மட்டுமே இதனை மற்றகட்சிகள் விமர்சிக்கிறார்கள்.

பாரதி பிறந்த மண்ணில் சாதியைசொல்லி மோதல்கள் நடப்பது வேதனைக்குரியது. இதன் அடிப்படை காரணத்தை ஆய்வுசெய்ய வேண்டும். போலீஸ் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகும், லஞ்சம், ஊழலுக்கு எதிராக பெரியமாற்றம் வரவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...